Home இலங்கை சமூகம் பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற தாய்…தீவிரமடையும் விசாரணை!

பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற தாய்…தீவிரமடையும் விசாரணை!

0

மேல் மாகாணத்தில் பிறந்து ஒன்பது மாதங்களேயான குழந்தையைப் பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய தாய் ஒருவரே தனது ஒன்பது மாதக் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த குழந்தையின், தாயார் மஹபாகே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.நாகர்கோவிலில் நுழைவாயில் கதவுகள் திருட்டு: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

மேலதிக விசாரணை

ராகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக குழந்தை தாயினால் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் வீசி கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

இலங்கையில் உயரமான நபர் இவர் தானாம்… எங்கு உள்ளார் தெரியுமா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version