Home இலங்கை சமூகம் மரக்கிளை முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

மரக்கிளை முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

0

நுவரெலியா – வலப்பனை மத்துரட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பட்டிகோட பகுதியில் மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(18.07.2024) இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

இவ்வாறு உயிரிழந்தவர் 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் சீரற்ற வானிலை காரணமாக காற்றின் தாக்கத்தினால் மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை மத்துரட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version