Home முக்கியச் செய்திகள் இசை நிகழ்ச்சியில் நடந்த கொடூரம்: இளைஞர் பரிதாப மரணம்

இசை நிகழ்ச்சியில் நடந்த கொடூரம்: இளைஞர் பரிதாப மரணம்

0

ஹம்பாந்தோட்டை (Hambantota) – வீரகெட்டிய (Weeraketiya) மொறயாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வீரகெட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய (13)  தினம் பதிவாகியுள்ளது. 

வீரகட்டிய மொறயாவைச் சேர்ந்த பொலபொடுவைச் சேர்ந்த ருவன் குமார என்ற 30 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இசை நிகழ்ச்சி

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீரகெட்டிய மொறயா சந்தியில் ஆறு நாட்களாக இடம்பெற்ற இந்த இசை நிகழ்ச்சியின் இறுதி நாள் கடந்த 13 ஆம் திகதியாகும். 

குறித்த நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் வந்திருந்த நிலையில், இரவு 11.30 மணியளவில் வந்திருந்த குழுவினருக்கும் வெற்றிலை வியாபாரி ஒருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் கத்திக்குத்துக்கு இலக்காகி வாலிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மேலதிக விசாரணை

காயமடைநத்த வாலிபரை வீரகட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மேலும் ஐந்து பேர் தங்காலை (Tangalle) மற்றும் எம்பிலிப்பிட்டிய (Embilipitiya) வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் வீரகட்டிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version