Home முக்கியச் செய்திகள் இராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

இராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதற்கு பதிலாக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அவர்களது மாதாந்த சம்பளத்துடன் சத்துணவு தொகையை சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் (Pramitha Tennakoon) தெரிவித்துள்ளார்.

அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை இராணுவத்திடம் இருந்து சலுகை விலையில் பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சில் இன்று (29) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

நிதிப் பலம் 

இதனைச் செய்வதன் மூலம் இராணுவ உறுப்பினர்களின் நிதிப் பலம் மேலும் ஸ்திரமாக இருப்பது மட்டுமன்றி நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பன மிகவும் தீவிரமானதாக இருக்கும் என பிரமித பண்டார தென்னகோன் கூறியுள்ளார்.

இந்த புதிய முடிவு சுமார் ஐம்பத்தைந்தாயிரம் ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/alimony-along-with-salary-for-sl-defence-forces-1724935351?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version