Home உலகம் ஈரான் மீது அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

ஈரான் மீது அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

0

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை நடத்தக்கூடாது என்று ஈரானை அமெரிக்கா எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக, ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, ஈரான் இராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் கடந்த வாரம் தாக்குதல் மேற்கொண்டது.

அமெரிக்காவின்  எச்சரிக்கை

இதன்போது, ஈரானின் தெஹ்ரான் பகுதியில் உள்ள இராணுவ முகாம்கள் மீது வான்வழியாக அதிரடி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இவ்வாறான பதற்றங்களுக்கு மத்தியில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கக் கூடாது, மீறி தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா உதவும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.   

Source: https://ibctamil.com/article/america-warning-to-iran-israel-s-attack-1730355833

NO COMMENTS

Exit mobile version