Home இலங்கை அரசியல் மட்டக்களப்பில் இடம்பெற்ற சுயேட்சைக்குழு ஒன்றின் வேட்பாளர் அறிமுகம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற சுயேட்சைக்குழு ஒன்றின் வேட்பாளர் அறிமுகம்

0

தமிழ்கொடி சமூக அமைப்பினர் என்னும் சுயேட்சைக்குழுவின் 11 வேட்பாளர்கள் அறிமுகம் நிகழ்வானது மட்டக்களப்பில் இன்று (16) இடம்பெற்றுள்ளது.

இதன்பேது, அக்குழுவில் தாயக்கட்டை சின்னத்தில் போட்டியிடும் பொன்னுத்துரை சுதர்சன் கருத்து தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்கு எந்தவொரு இடையூறுகளும் இன்றி சேவை செய்வதற்கு கட்டாயம்
அரசியல் தேவைப்படுகின்றது.

அதற்காக மட்டக்களப்பில் தமிழ்கொடி சமூக அமைப்பினர்
சுயேட்சை குழு 11ஆம் இலக்கத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றோம். எனவே, தேர்தலில்
வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் மக்களுக்கான சமூக சேவையை தொடர்ந்து எமது
அமைப்பு சேவை செய்துவரும்.

11 வேட்பாளர்கள்

பொன்னுத்துரை சுதர்சன் தலைமையில் சிங்கராசா மதவாணன், செல்வராசா அமுதினி,
சாமித்தம்பி வேலாயுதம், சிவலிங்கம் லோகேஸ்வரன், அமரசிங்கம் வினாயகமூர்த்தி,
குணராசா ஜெகதீஸ்வரன், நித்தியானந்தன் நிமல்ராஜ் ஆகிய 8 பேர் வேட்பாளர்களாக
களமிறங்கியுள்ளனர்.

இவர்களில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் கல்விமான்கள்
இளைஞர்கள் உள்ளடங்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்திலே தமிழ் கொடி அமைப்பு ஊடாக சமூக சேவை செய்து கொண்டிருந்த
சகோதரி ஒருவர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒன்றரை
வருடங்களாக சிறையில் இருந்தார்.

ஆகவே, சமூக சேவையை செய்ய வேண்டும் என்ற எண்ணம்
எங்களுக்கு இருந்ததன் காரணமாக அதற்கு எந்தவொரு இடையூறுகளும் இன்றி மக்களுக்கு
சேவை செய்வதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகின்றது.

மக்களிடம் கோரிக்கை 

இலங்கையை பொறுத்த வரையிலே வடக்கு – கிழக்கு மற்றும் மலையக பகுதியில் கடந்த எட்டு
வருடங்களுக்கு மேலாக சமூக சேவையினை திறன்பட கல்வி வளர்ச்சி, சமூக வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற சகல வகையிலும் எமது சமூக மக்களை
முன்னேற்றுவதற்காக இலங்கையிலும் சரி புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி
முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் செயற்பாட்டாளர்கள், உதவி செயற்பாட்டாளர்கள், ஊழியர்கள் போன்ற ஒரு கட்டமைப்பினை அடிப்படையாக வைத்து திறம்பட சேவை
செய்து வருகின்றோம்.

இதன்காரணணமாக, சமூக அமைப்பாக மக்கள் மனதில் குடிகொண்ட அமைப்பு தற்பொழுது
அரசியல் களத்திலே களமிறங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அது மக்களுக்கு சிறந்த
ஊழல் அற்ற சமூக சேவையை செய்வதற்காக அரசியலில் இறங்கியுள்ளோம். எனவே, மக்கள்
உங்கள் ஆதரவை வழங்குங்கள் என அன்புடன் உரிமயுடன் கேட்டுக் கொள்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version