2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்புக்குப் பிறகு ஈழத் தமிழர்களினது அரசியல் அழிப்பின் ஒரு களமாகவே மாறிவருகின்றது இந்த நாடாளுமன்றத் தேர்தல்.
கடந்த 15 வருட காலத்தில் என்றுமே இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தல் களத்தில் தமிழ் இனம் பிளவுபட்டு நிற்கின்றது.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான தமிழ் மக்களின் அரசியல் பயணம் என்பது ஒரு அங்குலம் கூட முன்நகராததற்கு தமிழ் தேசியத்தை அடிப்படையாக வைத்து அரசியல் செய்துவருகின்ற தரப்புக்கள்தான் காரணம் என்று நேரடியாகவே குற்றம் சுமத்துகின்றார்கள் பெரும்பாலான தமிழ் மக்கள்.
தமிழரசுக் கட்சி
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
தமிழ் மக்களின் அவல நிலைக்கு இந்தக் கட்சிகள் எப்படிக் காரணமாகின.. இந்தக் கட்சிகள் விட்ட தவறுகள் என்ன.. – போன்ற விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
https://www.youtube.com/embed/a4PtgX4D01o?start=111