Home இலங்கை அரசியல் சித்திரவதைக்குள்ளான ரணில் : அம்பலமாகும் புதிய தகவல்

சித்திரவதைக்குள்ளான ரணில் : அம்பலமாகும் புதிய தகவல்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிஐடி அழைப்பு மற்றும் விசாரணை என்ற பெயரில் திட்டமிட்டு உள ரீதியிலான சித்திரவதை அளிக்கப்பட்டதாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். 

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க, கடந்த 22ஆம் திகதி குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்காக முன்னிலையாகிய நிலையில், கைது செய்யப்பட்டார். 

இதன்போது, நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட அவரை, நாளை (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

22ஆம் திகதி காலை விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி, இரவு 10 மணியளவிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டு வெலிக்கடை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

இந்நிலையில், அன்றைய தினம், அவர் உணவு மற்றும் நீர் இன்றி அதிக நேரம் இருந்ததாகவும் அதனால் அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், அரசாங்கம் திட்டமிட்டு அவருக்கு உள ரீதியிலான சித்திரவதை கொடுத்து அவரின் உடல்நிலையை இந்த அளவு மோசமடைய செய்துள்ளார்கள் என அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார். 

https://www.youtube.com/embed/dUoa7765GKE

NO COMMENTS

Exit mobile version