கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலை சுட்டெண் இன்று (15) முதன்முறையாக 20,000 புள்ளிகளைத் கடந்துள்ளது.
இதற்கமைய, இலங்கை பங்கு சந்தை வரலாற்றில் மற்றொரு வரலாற்று மைல்கல்லைக் இன்று (15) கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பங்கு சந்தை
அதன்படி, அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் 289.69 புள்ளிகள் உயர்ந்து 20,218.36 புள்ளிகளாக பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
அத்துடன், இன்றைய வர்த்தக நாளின் மொத்தப் புரள்வு 9.54 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் கொழும்பு பங்குச் சந்தை, கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி 20,000 புள்ளிகளை எட்டியிருந்த போதிலும், அன்றைய தினம் முடிவில் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
