Home முக்கியச் செய்திகள் லொறி நேருக்கு நேர் மோதி கோர விபத்து : இருவர் பரிதாபமாக பலி

லொறி நேருக்கு நேர் மோதி கோர விபத்து : இருவர் பரிதாபமாக பலி

0

ஹொரவப்பொத்தானை – கஹடகஸ்திகிலிய பிரதான வீதியில் எலயாபத்து பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்றைய தினம் (28.08.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு கண்ணாடி ஏற்றிச் சென்ற லொறி, சாரதி தூங்கியதால் வீதியை விட்டு விலகி, அருகிலுள்ள பாலத்தின் தடுப்பு வேலியில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இந்த விபத்தில், பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது பாடசாலை மாணவி ஒருவரும், 27 வயது இளைஞரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞர் லொறியின் உதவியாளராக இருந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

லொறியில் பயணித்த சாரதி மற்றும் மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் ஹொரவப்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

உயிரிழந்த மாணவி மற்றும் லொறி உதவியாளரின் சடலங்கள் ஹொரவப்பொத்தானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஹொரவப்பொத்தானை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version