Home இலங்கை அரசியல் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து விளக்கமளித்த அநுர அரசு – செய்திகளின் தொகுப்பு

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து விளக்கமளித்த அநுர அரசு – செய்திகளின் தொகுப்பு

0

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayake) தலைமையிலான அரசின்
முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை ஊடகங்களுக்கு விளக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எம்முடைய விஞ்ஞாபனத்துக்கு அமைய இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்க புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்.

அவ்வாறு உருவாக்கப்படும் அரசமைப்பு நாட்டு மக்களிடம் வழங்கப்பட்டு அவர்களின் கருத்துக்களுடன் கூடிய கொள்கை மற்றும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,

NO COMMENTS

Exit mobile version