தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று இரவு சுவீடன் செல்லவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர் சனிக்கிழமை (27) சுவீடனின் ஸ்டாக்ஹோமில் புலம்பெயர் இலங்கையர்களுடனான சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.
சுவீடனில் நடைபெறவுள்ள பல கூட்டங்களிலும்
அத்துடன் சுவீடனில் நடைபெறவுள்ள பல கூட்டங்களிலும் திஸாநாயக்க கலந்து கொள்ளவுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சுவீடன் வெளிநாட்டுக் குழு இந்த விஜயத்தை ஏற்பாடு செய்துள்ளது.
அண்மையில் கன்டாவிற்கு விஜயம் செய்த அனுரகுமார திஸாநாயக்க அங்கும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை சந்தித்ததுடன் பல்வேறு கூட்டங்களிலும் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/anura-kumara-leaves-for-sweden-tonight-1714063104
