Home இலங்கை இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்த அநுர

இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்த அநுர

0

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொ​ருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றித் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எக்ஸ் கணக்கில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நன்றி கூறிய அநுர

மத்திய கிழக்கு மோதலினால் இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகள் குறித்து சில நாட்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினேன்.

இந்தியாவின் விரைவான ஆதரவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நேற்று 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொழும்பை வந்தடைந்தது.

இதனை கிடைப்பதற்கு ஒருங்கிணைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/anura-thanked-narendra-modi-1774785191

NO COMMENTS

Exit mobile version