Home இலங்கை அரசியல் அநுர ஜனாதிபதியாவது உறுதி – சஜித் அணியினர் வாழ்த்து

அநுர ஜனாதிபதியாவது உறுதி – சஜித் அணியினர் வாழ்த்து

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா, ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்

நாங்கள் சஜித் பிரேமதாசவை வெற்றி பெற செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.

ஜனநாயக அடிப்படை

ஆனாலும் நாட்டின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

எனவே, ஜனநாயக அடிப்படையில் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் முடிவு – அலி சப்ரி

இதேவேளை, நீண்ட மற்றும் கடினமான பிரசாரங்களின் பின்னர் தேர்தல் முடிவுகள் இப்போது தெளிவாக உள்ளன. நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்பட்ட போதிலும், மக்கள் அவர்களின் முடிவு என்னவென்பதை வெளிப்படுத்தி விட்டனர்.

மேலும் அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை நான் முழுமையாக மதிக்கிறேன்.

ஜனநாயகத்தில், மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பது முக்கியம். நான் அதை தயக்கமின்றி செய்கிறேன் என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

https://www.youtube.com/embed/Cga_NaSAtg4

NO COMMENTS

Exit mobile version