Home இலங்கை சமூகம் யாழ். மற்றும் கிளிநொச்சிக்கு பதில் அரச அதிபர்கள் நியமனம்

யாழ். மற்றும் கிளிநொச்சிக்கு பதில் அரச அதிபர்கள் நியமனம்

0

யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட பதில் அரச அதிபர்களிற்கு நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நியமனக் கடிதங்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவால் ​(Dinesh Gunawardena) நேற்று (03) கையளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அனுமதி 

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கடமை நிறைவேற்று அரச அதிபர்களாக இருந்த ம.பிரதீபன் மற்றும் எஸ்.முரளிதரன் ஆகிய இருவருக்குமே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த இருவரும் முழு நேர பதில் அரச அதிபராக பணியாற்ற அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டது.

இருவரும் இன்று (4.7.2024) மாவட்ட செயலகங்களில் தமது கடமையை பொறுப்பேற்பர் என தெரிவிக்கப்படுகிறது.

நியமனக் கடிதங்கள்

வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேற்று (03) வழங்கிவைத்தார்.

வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளராக சி.சுஜீவாவும், வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளராக கு.காஞ்சனாவும், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) அ.யோ.எழிலரசியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

NO COMMENTS

Exit mobile version