Home இலங்கை அரசியல் 355 கோடி வரி ஏய்ப்பு செய்த அர்ஜுன் அலோசியஸ் – அரசு நடவடிக்கை

355 கோடி வரி ஏய்ப்பு செய்த அர்ஜுன் அலோசியஸ் – அரசு நடவடிக்கை

0

அர்ஜுன் அலோசியஸ் செலுத்த தவறிய 3.5 பில்லியன் ரூபாய் வரிப்பணத்தை மீட்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாட்டில் நேற்று (15.10.2024) உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸுக்கு (Arjun Aloysius) வரி செலுத்தாமை காரணமாகவே 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்தாமை

அவர் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும், அரசுக்கு 3.5 பில்லியன் வரி பணம் அறிவிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த 3.5 பில்லியன் ரூபாய் வரிப்பணத்தையும் மீட்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

இடைநிறுத்தப்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பிலான ஆவணங்கள் அதிகளவில் காணப்படுவதால் அது தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது.

இந்நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றம் (colombo magistrate court) கடந்த (14.10.2024) அர்ஜூன் அலோசியஸ் (Arjun Aloysius) உள்ளிட்ட மூவருக்கு 6 மாதகால சிறைத் தண்டனை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version