Home இலங்கை சமூகம் கடமையிலிருந்த இராணுவ வீரர் எடுத்த தவறான முடிவு!

கடமையிலிருந்த இராணுவ வீரர் எடுத்த தவறான முடிவு!

0

இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

பத்தரமுல்லை – அக்குரேகொடவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் கடமையிலிருந்த போதே அவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

சம்பவம் 

மீரிகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும் மரணித்த இராணுவ வீரர், இராணுவ தலைமையகத்தின் பாதுகாப்பு கூடத்தில் மேலும் இரு இராணுவ வீரர்களுடன் கடமையிலிருந்த போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.    

NO COMMENTS

Exit mobile version