Home முக்கியச் செய்திகள் இன்று இரவு துப்பாக்கிதாரிகள் கைவரிசை: சுட்டுக்கொல்லப்பட்டார் ஆமி உபுல்

இன்று இரவு துப்பாக்கிதாரிகள் கைவரிசை: சுட்டுக்கொல்லப்பட்டார் ஆமி உபுல்

0

இன்று (03) இரவு, ராகம, படுவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆமி உபுல்
உயிரிழந்துள்ளார்.

 முச்சக்கர வண்டியில் வந்த துப்பாக்கிதாரிகள் இருவர், பிஸ்டல் வகை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

படுவத்தை கிராம அபிவிருத்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் நெருங்கிய கூட்டாளி

உயிரிழந்தவர்,நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் நெருங்கிய கூட்டாளியான ‘ஆமி உபுல்’ என பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் துப்பாக்கிதாரிகளின் அடையாளம் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version