Home முக்கியச் செய்திகள் அஸ்வெசும ஜூலை மாத கொடுப்பனவு : வெளியான மகிழ்ச்சி தகவல்

அஸ்வெசும ஜூலை மாத கொடுப்பனவு : வெளியான மகிழ்ச்சி தகவல்

0

அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நலன்புரி நன்மைகள் சபை இன்று (23.07.2025) அறிவித்துள்ளது. 

அஸ்வெசும உதவித் தொகை

இதன்படி, அஸ்வெசும முதல் கட்ட பயனாளிகளில் 1,424,548 பயனாளி குடும்பங்களுக்கு 11,296,461,250 ரூபாய் (11 ஆயிரத்து 296 மில்லியன் ரூபாய்) உதவித் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பயனாளிகள் ஜூலை 24 முதல் அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியுமென, நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version