பேருவளையில் மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பேருவளை காவல்துறை குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உட்பட மூன்று காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர்கள் காயமடைந்த நிலையில் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள்
இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது, காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக பேருவளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
