Home சினிமா கணவர் இறந்தால் பொட்டு வைக்க கூடாதா.. பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த வார ப்ரோமோ

கணவர் இறந்தால் பொட்டு வைக்க கூடாதா.. பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த வார ப்ரோமோ

0

பாக்கியலட்சுமி சீரியலில் தாத்தா மரணம் பற்றிய காட்சிகள் தான் கடந்த வாரம் பரபரப்பாக ஓடியது. மகன் கோபி எந்த சடங்கும் செய்யக்கூடாது என தாத்தா ஏற்கனவே கூறிவிட்டதால் பாட்டி அதில் உறுதியாக இருக்கிறார்.

அதனால் பாக்யா தான் இறுதி சடங்குகளை செய்து முடிகிறார். இந்நிலையில் அடுத்த வார ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

பொட்டு வைங்க பாட்டி

தாத்தாவின் அஸ்தியை பேரன்கள் சென்று நீரில் கரைத்துவிட்டு வருகிறார்கள். மேலும் மொத்த குடும்பமும் இன்னும் வருத்தத்தில் தான் இருக்கிறார்கள். தாத்தா அமர்ந்து இருந்த சேரில் இன்னும் அவர் இருப்பது போலவே பாக்யா உணர்கிறார்.

பாட்டி பொட்டு வைக்க மாட்டேன் என இருக்கிறார். நீங்க எப்போதும் போல இருங்க என அவரை கட்டாயப்படுத்தி பாக்யா தான் பொட்டு வைத்து விடுகிறார். 

Source: https://cineulagam.com/article/baakiyalakshmi-next-week-promo-1725814832

NO COMMENTS

Exit mobile version