Home இலங்கை சமூகம் நிலவும் சீரற்ற காலநிலை! திறக்கப்பட்டுள்ள வான்கதவுகள்

நிலவும் சீரற்ற காலநிலை! திறக்கப்பட்டுள்ள வான்கதவுகள்

0

மத்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா
மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக
பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் ஆகியன பெருக்கெடுத்துள்ளன.

நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக
நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன.

கடும் மழை

இதனால் மேல் கொத்மலை நீர்த்தேகத்தின் ஒரு வான்கதவு, இன்று (11) அதிகாலை
திறக்கப்பட்டது.

மேலும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.  இதேவேளை
நோர்ட்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமல சுரேந்திர
நீர்த்தேக்கப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதானால் அந்த
நீர்த்தேக்கத்தில் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான்பாய்கின்றன.

எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும்
அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்.கிளயார், டெவோன் ஆகிய நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும்
அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  

மேலதிக தகவல் – திவா

NO COMMENTS

Exit mobile version