Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தல் : வவுனியாவில் ஆரம்பமான வாக்குப்பெட்டி விநியோகம்

ஜனாதிபதி தேர்தல் : வவுனியாவில் ஆரம்பமான வாக்குப்பெட்டி விநியோகம்

0

நாளை (21) இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வவுனியா (Vavuniya) மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைள் நாளை காலை
இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள்
அமைக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்கள்

குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும்
இன்று காலை 7 மணிமுதல் எடுத்துசெல்லப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்தியநிலையமாக செயற்பட்டுவரும்
சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும்
வாக்களிப்பு நிலையங்களிற்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் பேருந்துகளின் மூலம்
எடுத்துச்செல்லப்பட்டது.

இதேவேளை வவுனியாவில் 128,585 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் தேர்தல்
கடைமைகளுக்காக காவல்துறையினர் உட்பட 2500 ற்கும் மேற்ப்பட்ட அரச ஊழியர்கள்
கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version