Home இலங்கை அரசியல் மனுஷவின் இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள பந்துல லால் பண்டாரிகொட! வெளியான வர்த்தமானி வெளியீடு

மனுஷவின் இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள பந்துல லால் பண்டாரிகொட! வெளியான வர்த்தமானி வெளியீடு

0

மனுஷ நாணயக்காரவின் (Manusha Nanayakkara) வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பந்துல லால் பண்டாரிகொடவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

அண்மையில் மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனை தொடர்ந்து இருவரும் அமைச்சுப் பதவிகளிலிருந்தும் விலகியிருந்தனர்.

வர்த்தமானி வெளியீடு

இந்த நிலையில் பந்துல லால் பண்டாரிகொடவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் காலி மாவட்ட விருப்புப் பட்டியலில் மனுஷ நாணயக்கார இரண்டாவது இடத்தைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில், அவர் பதவி விலகியுள்ளதால் விருப்பு பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பெற்ற பந்துல லால் பண்டாரிகொடவுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version