Home இலங்கை அரசியல் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாநாடு

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாநாடு

0

இலங்கையில் அதிபர் தேர்தல் பரப்புரைகள் பல்வேறு பிரதேசங்களிலும் ஆரம்பித்துள்ள நிலையில் மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஏற்பாட்டில் மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது.

இன்று (27.06.2024) மாலை 6 மணி முதல் மட்டக்களப்பில் உள்ள கோல்டன் ரிவர் ஹோட்டலில் குறித்த மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதித்துறை நிறுவனங்கள்

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் அமைந்துள்ள வங்கி மற்றும் நிதித்துறை நிறுவனங்களினை இணைத்து குறித்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“வங்கி மற்றும் நிதித்துறைப் பங்குதாரர்களின் மாநாடு, ஒரு தெளிவான நிதி சூழ்நிலையை உருவாக்குவதை நோக்கி“ எனும் தலைப்பில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version