Home இலங்கை அரசியல் அரசுக்கு உதவி :எதிர்க்கட்சியின் ஏழு எம்பிக்களுக்கு கிடைத்த மதுபான அனுமதிப் பத்திரம்

அரசுக்கு உதவி :எதிர்க்கட்சியின் ஏழு எம்பிக்களுக்கு கிடைத்த மதுபான அனுமதிப் பத்திரம்

0

எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேலும் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் இருந்து மதுபானக் கடை அனுமதிப் பத்திரங்களை (பார் லைசென்ஸ்) பெற்றுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தென் மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.

அரசுக்கு உதவி செய்வதாக உறுதியளித்ததையடுத்து

அரசுக்கு உதவி செய்வதாக உறுதியளித்ததையடுத்து இந்த மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான தகவல்கள் அந்தந்த மாவட்ட விகாராதிபதிகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசாங்கத்துடன் இணைய தமிழ் எம்பியின் இரகசிய டீல் அம்பலம்

ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் 

இதேவேளை, ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் ஏற்கனவே மதுபான உரிமங்களைப் பெற்றுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது வாழ்க்கையில் சந்திரிக்கா விட்ட வரலாற்று தவறு!

அரசாங்கம் இருநூறு புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version