பொலன்னறுவை (Polonnaruwa) – மெதிரிகிரிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட தஹம் வெவ பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடு மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் காது மற்றும் மூக்கில் அதிகளவு இரத்தம் கசிந்த நிலையில் உயிரிழந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தூக்கில் தொங்கி உயிரிழந்தமைக்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மெதிரிகிரிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், 49 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, மேலதிக விசாரணைகளுக்காக சடலம் பொலன்னறுவை மரண விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் மத்திரிகிரிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Source: https://ibctamil.com/article/body-of-a-person-who-died-mysteriously-1719298507
