Home முக்கியச் செய்திகள் வெளிநாடொன்றில் முல்லைத்தீவு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

வெளிநாடொன்றில் முல்லைத்தீவு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

0

குடும்ப வறுமை காரணமாக சவுதிக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

முல்லைத்தீவு துணுக்காய், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கலாநாதன் கிருஸ்ணவேணி என்ற பெண்ணே தனக்கு நேர்ந்த கொடுமைகளை ஊடகங்களிடம் விபரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

 சவுதிக்கு பணிப்பெண்

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள் குடியேறிய பின்னர் குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக முகவர் ஒருவர் மூலமாக சட்ட பூர்வமாக சவுதிக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்றேன்.

நான் ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் வீட்டு வேலைக்கு தான் சென்றேன். மேலதிக வேலை செய்ய என்னால் முடியாது. போகும் போது எனக்கு 49 வயது. ஆரம்ப சம்பளம் அவர்களது பணத்தில் 900 தந்தார்கள். முதல் மாத சம்பளம் இன்னும் தரவில்லை.

பின்னர் எனக்கு மேதிலக சமையல் வேலைகள் தந்தார்கள்.

தோட்ட வேலை உட்பட பல வேலைகளை அவர்களது தாய் இறந்ததும் செய்தேன்.மேலதிக வேலையால் நான் சிரமப்பட்டேன்.

 கடும் சித்திரவதை

என்னை துன்பப்படுத்தினார்கள். காலில் அடித்தார்கள். இரண்டு வருடத்தில் திரும்பி வருவதாகவே சென்றிருந்தேன். ஆனால் என்னை வர அவர்கள் விடவில்லை. 2015 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் போன நான் கடைசியாக என்னை துன்பப்படுத்தி அங்கு காவல்துறையில் நிறுத்தி இறுதியாக அரசாங்கத்தால் 2024 ஆம் ஆண்டு தான் அழைத்து வந்தனர்.

எனக்கு இறுதி மாத சம்பளமும் தரவில்லை. நான் உழைக்கச் சென்று தற்போது பணமும் இல்லை. உடலும் இயலாத நிலையில் உள்ளேன். அந்த குடும்பத்தில் விசேட தேவையுடைய ஒரு பிள்ளை உள்ளது. அதுவும் அங்கு துன்பப்படுகிறது. அதனையும் காப்பாற்ற வேண்டும். எனது இரண்டு மாத சம்பளமும் தேவை எனத் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version