Home முக்கியச் செய்திகள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிணையில் விடுதலை

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிணையில் விடுதலை

0

புதிய இணைப்பு 

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் (Ali Sabri Raheem) இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு புத்தளம் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று (20) காலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் அலி சப்ரி ரஹீமுக்கு நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கல்பிட்டி காவல் நிலையத்தில் முன்னிலையாகி இருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் முன்னிலை

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக குற்றம்

அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடத்திற்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கற்பிட்டி காவல்துறையினரால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை(Ali Sabri Rahim) உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான அயோனா விமலரத்ன, கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் பகிரங்க பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/member-of-parliament-ali-sabri-rahim-arrested-1721455986?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version