Home இலங்கை சமூகம் வாக்களிக்க ஊருக்கு செல்லும் மக்களுக்கு வெளியான தகவல்

வாக்களிக்க ஊருக்கு செல்லும் மக்களுக்கு வெளியான தகவல்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக பயணிக்கும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்து சபை விசேட பேருந்து சேவையொன்றை முன்னெடுக்கவுள்ளது.

குறித்த தகவலை இலங்கை போக்குவரத்துச் சபையின் தவிசாளர் சஷி வெல்கம வெளியிட்டுள்ளார்.

அதன் படி, கிராமங்களுக்குச் சென்று வாக்களிக்கச் செல்லும் மக்களின் வசதிக்காக தேவைப்பட்டால், நீண்ட தூரப் பயணச் சேவைகளுக்காக மேலதிக அரச பேருந்துகள் பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடருந்து சேவை

இதற்கு மேலதிகமாக, தனியார் ஊழியர்கள் வாக்களிக்க உள்ளதால், மேலதிக பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும், குறைந்த எண்ணிக்கையிலான குறுகிய பயண சேவைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், மேலதிக தொடருந்து சேவைகளை நடத்துவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் தொடருந்துகள் வழமை போன்று இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Source: https://ibctamil.com/article/bus-services-during-elections-sri-lanka-1726610377

NO COMMENTS

Exit mobile version