Home முக்கியச் செய்திகள் வவுனியாவில் அனுமதியின்றி அமைக்கப்படும் வியாபார நிலையம்

வவுனியாவில் அனுமதியின்றி அமைக்கப்படும் வியாபார நிலையம்

0

Courtesy: kapilan

 வவுனியா நகரப்பகுதியில் மாநகரசபையின் அனுமதியின்றி வியாபார நிலைய ஒன்று
அமைக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரப் பகுதியில் உள்ள அரச காணியில் முறையான அனுமதியின்றி சிறிதாக
அமைக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையம் ஒன்றை பெரிதாக கட்டும் நடவடிக்கை ஒன்று
முன்னெடுக்கப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் மாதம் 10ம் திகதி இதனை அகற்றுவதற்கு
மாநகரசபையினர் முற்பட்ட போதும் சட்டரீதியான சரியான முன்னாயத்த நடவடிக்கையினை
செய்ய தவறியதன் காரணமாக அதனை அகற்ற முடியவில்லை.

மாநகரசபை விதித்த தடை

இந்நிலையில் மாநகரசபையினால்  அபிவிருத்தியினை மேலும் மேற்கொள்ளாமல் தடை
விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றையதினம் வியாபார நிலையத்தின் கூரை தகடுகள் முழுமையாக
அமைக்கப்பட்டுள்ளது.

மாநகர ஆணையாளரின் விளக்கம்

இது தொடர்பாக, மாநகர சபை ஆணையாளர், மே.சாந்தசீலனிடம் கேட்ட போது,

குறித்த வியாபார நிலையத்திற்கு எதுவித அனுமதியினையும் எங்களால்
வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நேற்றையதினம் வர்த்தக சங்கத்தினாலும் எமக்கு
தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த தரப்பினர் பள்ளிவாசலின் குத்தகை பத்திரத்தினை எமக்கு
சமர்ப்பித்து ஒரு விண்ணப்ப படிவத்தினை தந்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் கேட்ட போது குறித்த குத்தகை இருப்பதாக
தெரிவித்த போதும் அதனை இதுவரை பார்வையிடவில்லை.

மேலும் இவ் அனுமதியற்ற வியாபார நிலையத்திற்கான நடவடிக்கையினை கட்டாயம்
எடுப்போம் எனவும் தெரிவித்தார். 

NO COMMENTS

Exit mobile version