Home இலங்கை ஈராக்கில் உள்ள இலங்கை தூதரகத்தை திறக்க விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

ஈராக்கில் உள்ள இலங்கை தூதரகத்தை திறக்க விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

0

ஈராக்கின் (Iraq) பக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள ஈராக் தூதரகத்தின் பொறுப்பாளர் முஹம்மது ஒபைட் அல்-மசூதி (Mohammed Obaid Jabur Al-Masoudi) இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

கனேடிய மாகாணமொன்றில் அதிகரிக்கப்பட்ட சம்பளம்

இலங்கை தூதரகம்

இலங்கை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் ( Nalin Fernando) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

ஈராக்கில் வர்த்தக உறவுகளை ஏற்படுத்த இலங்கை முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், விசா பிரச்சினைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை இந்த தூதரகம் மூலம் செயற்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச மற்றும் தனியார் விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

இன்றும் இடியுடன் கூடிய பலத்த மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version