Home இலங்கை அரசியல் யாழில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டம்

யாழில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டம்

0

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரனை (P. Ariyanethiran )ஆதரித்து யாழ்.அச்சுவேலி பகுதியில் தேர்தல் பரப்புரை கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தேர்தல் பரப்புரை கூட்டமானது நேற்று (12) இரவு அச்சுவேலி (Achchuveli), கதிரிப்பாய் முரசொலி சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது.

கூட்டத்தில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா,
யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், வடக்கு மாகாண
சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்
முன்னாள் தவிசாளர் தி.நிரோஸ், வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் க.தர்ஷன்,
பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

சங்கு சின்னத்திற்கு ஆதரவு

இதேவேளை, தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரின் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும் என மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட இந்து இளைஞர் பேரவை கோரிக்கை முன்வைத்துள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொருளாளர் நா.புவனசுந்தரம் நேற்று வியாழக்கிழமை (12) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version