Home முக்கியச் செய்திகள் பெருந்தொகையிலான இ-கடவுச்சீட்டுக்கள் கொள்வனவு ரத்து

பெருந்தொகையிலான இ-கடவுச்சீட்டுக்கள் கொள்வனவு ரத்து

0

ஐந்து மில்லியன் இ-கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான ஆரம்பக் கொள்முதலின் ஒரு பகுதியாக, இரண்டு நிறுவனங்களிடமிருந்து ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் (750,000) என்-சீரிஸ் இ-கடவுச்சீட்டுக்களை வாங்குவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மொஹமட் லாஃபர், எனிக் லங்கா தனியார் நிறுவனம் மற்றும் அதன் நிறைவேற்றுத் தவிசாளரினால்
தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்து, அமைச்சரவை தீர்மானம் நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட டெண்டர் நடைமுறையை மீறும் ஊழல் கொடுக்கல் வாங்கல் என இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், இந்த இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வரை செல்லுபடியாகும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மொஹமட் லாஃபர் உத்தரவிட்டுள்ளார்.

பிரதிவாதிகள்

இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொது பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிய திரான் அலஸ் மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரின் முன்னாள் அமைச்சரவை உள்ளிட்ட தரப்பினரை குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையில், நீலகண்டன் மற்றும் நீலகண்டன் சட்ட நிறுவனத்தின் அறிவுறுத்தலின் பேரில் சட்டத்தரணிகளான பிரமோத் பெரேரா மற்றும் ஹிருனி டி அல்மெய்டா ஆகியோருடன் மனுதாரர் நயன தர்ஷன பிரசாத் தெனிகம சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் கோரயா முன்னிலையாகியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version