Home இலங்கை அரசியல் ஜனாதிபதித் தேர்தல் குறித்து சமல் ராஜபக்ச விடுத்துள்ள கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தல் குறித்து சமல் ராஜபக்ச விடுத்துள்ள கோரிக்கை

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது மகன் நாமல் ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற அமைச்சர் சமல் ராஜபக்ச (Chamal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் 

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவர் மகிந்த ராஜபக்ச என்பதோடு அவர் இந்த நாட்டில் பல அபிவிருத்திப் பணிகளைச் செய்துள்ளார்.

எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக நியமிக்குமாறு தங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கோரிக்கை விடுப்பதாக சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version