Home இலங்கை அரசியல் ரணில் போன்றோரின் பொய் கதைகளை நம்ப வேண்டாம்: சந்திரசேகரன் சாடல்

ரணில் போன்றோரின் பொய் கதைகளை நம்ப வேண்டாம்: சந்திரசேகரன் சாடல்

0

அதிபர் தேர்தலை எவரும் பிற்போட முடியாது எனவும் எதிர்வரும் ஒக்டோபர், செப்டம்பர் மாதங்கள் இடையே அதிபர் தேர்தல் நடைபெறும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழில் (Jaffna) இன்று (4.7.2024) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “ரணிலின் நரித்தனம் இனி எடுபடாது. மக்கள் இவ்வாறானவர்களின் பொய் கதையை நம்ப வேண்டாம். 

அதிபரின் பதவிக்காலம்

இரண்டு மாதங்களுக்கு முன்பு ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலை ஒத்திவைப்பதாக முட்டி போட்டார்.

அது உடனேயே உடைந்துவிட்டது.

தற்போது அதிபரின் பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்து ஒரு முட்டி போடப்பட்டுள்ளது. அதுவும் உடைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்கவே (Anura Kumara Dissanayaka) வெற்றி பெறுவார் என குறிப்பிட்டுள்ளார்.

Source: https://ibctamil.com/article/chandrasekaran-on-presidential-election-jaffna-1720102318

NO COMMENTS

Exit mobile version