Home முக்கியச் செய்திகள் மின்பிறப்பாக்கி விவகாரம்: தமிழ் அரசியல்வாதிகளால் வஞ்சிக்கப்பட்டேன்…! சாடும் வைத்தியர் அர்ச்சுனா

மின்பிறப்பாக்கி விவகாரம்: தமிழ் அரசியல்வாதிகளால் வஞ்சிக்கப்பட்டேன்…! சாடும் வைத்தியர் அர்ச்சுனா

0

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மின்பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) வழங்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் பாரிய அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாக வைத்தியர் அர்ச்சுனா (Archuna) தெரிவித்துள்ளார்.

அத்துடன்  அரசியல்வாதிகள் தனது விடயத்தில் புகுந்து விளையாடி தன்னை ஒரு பேசுபொருளாக மாற்றி தனது உயிரை கூட பணயம் வைக்கும் அளவிற்கு மாற்றி விட்டார்கள் என்றும் வைத்தியர் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடக்கு அரசியல்வாதிகள் தமது ஆதரவாளர்கள் மூலமாக தன் மீது கண்டனங்களையும் விமர்சனங்களை மக்கள் மத்தியில் பரப்புவதாக வைத்தியர் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் தெரிவித்த மேலும் பல விடயங்கள் காணொளியில்.. 

https://www.youtube.com/embed/EwNU2QUYrwo

NO COMMENTS

Exit mobile version