Home இலங்கை அரசியல் செம்மணியில் பனை மரங்களுக்கு அடியிலும் மனித எச்சங்கள்.. சந்தேகம் வெளியிட்ட சிறீதரன்

செம்மணியில் பனை மரங்களுக்கு அடியிலும் மனித எச்சங்கள்.. சந்தேகம் வெளியிட்ட சிறீதரன்

0

செம்மணியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடப்பட்டிருக்கும் பனை மரங்களுக்கு அடியிலும் மனித எச்சங்கள் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “1995 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையும் முழுக்க முழுக்க இராணுவ முகாமாகவும், இராணுவக் கட்டுப்பாட்டு வலயமாகவும் கையகப்படுத்தப்பட்டிருந்த செம்மணிப் பகுதியில் இனங்காணப்படும் மனித என்புத் தொகுதிகள் சாதாரணமாக புதைக்கப்பட்டவை தான் என்று கூற முற்படுவது மிக அபத்தமானது.

இந்துக்களின் சடங்குமுறையில் உடலங்களை கூட்டாக அடக்கம் செய்வதோ, ஆடைகளற்று அடக்கம் செய்வதோ பின்பற்றப்படுவதில்லை.

அவ்வாறிருக்க ஒரு இனத்தின் பலதசாப்தகாலப் போராட்டத்துக்கான சாட்சியமாக அணுகத்தக்க முக்கியத்துவம் மிக்க விடயமொன்றை மடைமாற்றும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுகிறார்கள்” என தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், 

NO COMMENTS

Exit mobile version