2005ஆம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை தீர்மானித்ததில் சீன புலனாய்வு துறையின் பங்களிப்பு மிகப் பிரதானமானது என்று அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு தெரிவித்தார்.
தற்போதைய அராசாங்கம், ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஊழலில் ஈடுபட்டவர்கள், குறிப்பாக மகிந்த ராஜபக்ச குடும்பத்தை கைது செய்வோம் என குறிப்பிட்டிருந்தது.
மேலும், ராஜபக்ச குடும்பத்தை சிறையில் அடைப்போம். அவர்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்போம் எனவும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், “சீனாவுக்கு இலங்கையில் கால்பதிப்பதற்கு பிரதான காரணமாக இருந்தது, மகிந்த ராஜபக்சவின் அரசியல் வரவு” என மு.திருநாவுக்கரசு குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீனாவுடன் ஒரு நல்ல நட்புறவை பேணி வருகின்றார். இந்நிலையில், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க சீனா துணைநிற்குமா என கேள்வி எழுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் அலசி ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
