Home இலங்கை அரசியல் இணைந்து பணியாற்ற தயார் : புதிய ஜனாதிபதிக்கு சீனாவிலிருந்து வந்த தகவல்

இணைந்து பணியாற்ற தயார் : புதிய ஜனாதிபதிக்கு சீனாவிலிருந்து வந்த தகவல்

0

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு(anura kumara dissanayaka) சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்(Xi Jinping), சீன(china) அரசாங்கம் மற்றும் சீன மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் புதிய ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பாரம்பரிய நட்பு அண்டை நாடுகள்

சீனாவும் இலங்கையும்(sri lanka) பாரம்பரிய நட்பு அண்டை நாடுகள். நமது இரு நாடுகளும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட கடந்த 67 ஆண்டுகளில், இருதரப்பும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஆதரவையும் அளித்து, வெவ்வேறு அளவிலான நாடுகளுக்கிடையே நட்பு ரீதியான சகவாழ்வு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கு சிறந்த முன்மாதிரியாக உள்ளன.

சீன-இலங்கை உறவுகளின் வளர்ச்சிக்கு நான் அதிக முக்கியத்துவம் அளித்து, எங்களது பாரம்பரிய நட்பை கூட்டாக முன்னெடுத்துச் செல்லவும், அரசியல் பரஸ்பர நம்பிக்கையை பலப்படுத்தவும், உயர்தர பட்டுப்பாதை திட்டத்தில் அதிக பலன்களை அடையவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன்.

நேர்மையான பரஸ்பர உதவி

நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் நித்திய நட்பின் அடிப்படையிலான சீன-இலங்கை மூலோபாய கூட்டுறவின் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னெடுத்து, இரு நாட்டு மக்களுக்கும் அதிக நன்மைகளை கொண்டு வரும் என்று ஷி ஜின்பிங், ஜனாதிபதிக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version