Home முக்கியச் செய்திகள் லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா பதவி விலகினார்

லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா பதவி விலகினார்

0

லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன (Pasanda Yapa Abeywardena) தனது பதவிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு (Nalin Fernando) இன்று (23) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் தனது பதவி விலகலை உறுதிப்படுத்தியுள்ளார்.

புதிய ஜனாதிபதிக்கு தலைவர் ஒருவரை நியமிக்கும் வாய்ப்பை வழங்கி அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரணில் தோல்வி 

இதேவேளை புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) பதவியேற்பைத் தொடர்ந்து முக்கிய பதவிகளிலிருந்து பலர் விலகியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் தோல்வியை அடுத்து நான்கு ஆளுநர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version