Home முக்கியச் செய்திகள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காவல்துறை வெளியிட்ட புகைப்படம் : இவர்களை தெரியுமா..!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காவல்துறை வெளியிட்ட புகைப்படம் : இவர்களை தெரியுமா..!

0

குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு, தென் மாகாணத்தில் ஒரு கடுமையான குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் முகப் படங்களை வெளியிட்டுள்ளதுடன் அவர்களைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளது.

 சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட குற்றவாளிகளின் காட்சித் தரவுகளின் அடிப்படையில், குற்றப் பதிவுப் பிரிவின் அனுசரணையுடன், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தப் படங்கள் உருவாக்கப்பட்டன.

சந்தேக நபர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள்

சந்தேக நபர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் ASP-ஐ 071-8592867 என்ற எண்ணில் அல்லது பிரிவின் OIC-யை 074-1357642 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறுகுற்றப்புலனாய்வுத் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.

NO COMMENTS

Exit mobile version