Home இலங்கை அரசியல் ஈழத்தமிழர்களை ஏளனமாக சித்தரித்த கேர்ணல் ஹரிஹரன்

ஈழத்தமிழர்களை ஏளனமாக சித்தரித்த கேர்ணல் ஹரிஹரன்

0

இந்தியாவின் அமைதிப்படையினுடைய உளவுத்துறைக்கு பொறுப்பான கேர்ணல் ஹரிஹரன் எழுதிய கட்டுரையில் ஈழத்தமிழர்களை ஏளனமாக சித்தரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

அவ்வாறு கேர்ணல் எழுதிய கட்டுரையில், கொடுப்பதை வாங்கும் பிச்சைக்காரனின் நிலையிலேயே ஈழத்தமிழர்கள் இருப்பதாகவும் அவர்களின் நிலையை கண்டு தான் பரிதாபம் அடைவதாக ஏளனமாக எழுதப்பட்டுள்ளது என வேல் தர்மா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போதுள்ள இந்திய தூதுவர் ஈழத்தமிழர்களை சந்திக்கும் போது தன்னை ஒரு மேலாளராகவும் ஈழத்தமிழர்கள் தங்களது ஏவலை கேட்க கூடியவர்கள் என்ற அடிப்படையிலும் நடத்துவது அரச உளவியல் அல்ல என ஆய்வாளர் வேல் தர்மா கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

Source: https://tamilwin.com/article/colonel-hariharan-ridiculed-srilankan-tamils-1719421633

NO COMMENTS

Exit mobile version