Home இலங்கை சமூகம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையே மோதல்: ஒருவர் படுகாயம்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையே மோதல்: ஒருவர் படுகாயம்

0

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் வர்த்தகப் பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒரு மாணவன் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்றையதினம்(14.03.2025) காலை நடந்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் பிரிவு இரண்டாம் ஆண்டில் கல்விகற்றுவரும் 4 மாணவர்களுக்கிடையே சம்பவதினமான இன்று காலை ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

விசாரணைகள் 

இதன்போது, காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, காயமடைந்த மாணவன் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version