Home இலங்கை சமூகம் யாழில் ஒரே தடவையில் 3 கன்றுகளை ஈன்ற பசு

யாழில் ஒரே தடவையில் 3 கன்றுகளை ஈன்ற பசு

0

பசுவொன்று 3 கன்றுகளை ஈன்ற அரிய சம்பவமொன்று யாழ்.வடமராட்சியில் பதிவாகியுள்ளது.

வடமராட்சி – உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசுவே இவ்வாறு 3 கன்றுகளை ஈன்றுள்ளது.

அபூர்வ நிகழ்வு

பொதுவாக பசுக்கள் ஒன்று அல்லது இரண்டு கன்றுகளை ஈனும். எனினும் ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவிப்பதென்பது அபூர்வமான நிகழ்வாக கருதப்படுகின்றது.

கன்றுகளை ஈன்ற பசுவையும் கன்றுகளையும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version