Home முக்கியச் செய்திகள் கொழும்பில் பயங்கரம்! நண்பருடன் இணைந்து மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன்

கொழும்பில் பயங்கரம்! நண்பருடன் இணைந்து மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன்

0

கொழும்பு (Colombo) தலஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவன் தனது நண்பருடன் இணைந்து மனைவியை கொலை செய்துள்ளதாக தலங்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், 31 வயதுடைய பெண்னொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த 31 வயதுடைய பெண் தனது கணவருடன் வாடகை அடிப்படையில் வீடொன்றில் வசித்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

சந்தேக நபர்கள் 

சந்தேகநபரும் மற்றும் அவரது நண்பர்களும் கூரிய ஆயுதத்தால் வீதியில் வைத்து பெண்ணை கொலை செய்துவிட்டு வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மற்றும் சம்பவம் தொடர்பில் ஹிகுரக்கொட பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான உயிரிழந்த பெண்ணின் கணவரும் கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய மற்றைய சந்தேக நபரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

இஸ்ரேலை விட்டு விலகாத ஆபத்துக்கள்: எந்த நேரமும் வெடித்துச் சிதறக்கூடிய எரிமலையின் உச்சத்தில் இஸ்ரேல்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

NO COMMENTS

Exit mobile version