Home விளையாட்டு பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து தருசி கருணாரத்ன வெளியேற்றம்

பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து தருசி கருணாரத்ன வெளியேற்றம்

0

பாரிஸ்(Paris) 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் பெணகளுக்கான 800 மீற்றர் Repechage என்ற இராண்டாம் வாய்ப்பு தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய இளம் வீராங்கனை தருஷி கருணாரட்ன(Tharushi Karunarathna) அந்த சுற்றுடன் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறியுள்ளார்.

குறித்த போட்டியானது, சனிக்கிழமை (03) நடைபெற்றது.

கடந்த (2) ஆம் திகதி நடைபெற்ற தகுதிகாண் சுற்றின் 6ஆவது போட்டியில் பங்குபற்றி அப் போட்டியை 2 நிமிடங்கள் 07.76 செக்கன்களில் நிறைவு செய்தார்.

இரண்டாம் வாய்ப்பு

இதனை தொடர்ந்து நேற்று Repechage எனும் இரண்டாம் வாய்ப்பு தகுதிகாண் சுற்றின் 4ஆவது போட்டியில் பங்குபற்றினார்.

அப் போட்டியை 2 நிமிடங்கள் 06.66 செக்கன்களில் நிறைவு செய்து 7ஆம் இடத்தைப் பெற்று ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.

இரண்டாம் வாய்ப்பு தகதிகாண் சுற்றில் 4 போட்டிகளில் 31 வீராங்கனைகள் பங்குபற்றியதுடன் ஒட்டுமொத்த நிலையில் தருஷி 27ஆவது இடத்தைப் பெற்றார்.

வெளியேற்றம்

தன்னால் நிலைநாட்டப்பட்ட தேசிய சாதனையை (2:00.66 நி.) ஒலிம்பிக்கில்முறியடிக்கும் குறிக்கோளுடன் சென்ற தருஷியினால் அதனை முறியடிக்க முடியாமல் போயுள்ளது.

மேலும், பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலிருந்து முதல் சுற்றுடன் வெளியேறிய நான்காவது இலங்கையர் தருஷி கருணாரட்ன ஆவார்.

கங்கா செனவிரட்ன (நீச்சல் வீராங்கனை), கய்ல் அபேசிங்க (நீச்சல் வீரர்), விரேன் நெத்தசிங்க (பாட்மின்டன்) ஆகிய மூன்று இலங்ககையர்கள் ஏற்கனவே முதல் சுற்றுடன் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version