உலகின் முக்கிய நிழலுலக தாதாவும் பாதாள முகமுமான தாவூத் இப்ராஹிமின் டி- சின்டிகேற் தனது போதைப்பொருள் வர்த்தகத்தை தென்னிந்தியாவுக்கும் மற்றும் இலங்கையின் வடபகுதிக்கும் இடையிலான விடுதலைப்புலிகளின் பழைய கடல் வழிகளைப் பயன்படுத்தி ஆரம்பித்திருப்பதாக இந்திய புலனாய்வுத்துறை புதிய செய்திகள் ஈழத்தமிழ் மக்களின் தேசிய ஆன்மாவுக்கு முக்கியமான நவம்பர் மாதத்தில் வெளியிட்டுள்ளது.
பாதாள உலக வணிகப்போர்வையில் இயங்கும் தாவூத் இப்ராஹிமின் டி- சின்டிகேற் தனது போதைப்பொருள் வணிகத்துகாக விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுடன் புதியதொரு கூட்டணியை உருவாகியுள்ளதான தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாவூத்தின் பாதாள உலகம் தற்போது தனது போதைப்பொருள் வர்த்தகத்தை தென்னிந்தியாவுக்கும் மற்றும் இலங்கையின் வடபகுதிக்கும் இடையிலான விடுதலைப் புலிகளின் பழைய கடல் வழிகளில் நடத்துவதான செய்திகள் தற்போது வருவதன் நோக்கம் என்ன?
இவ்வாறான செய்திகள் உண்மையாக இருக்குமோ என்ற ஐயங்களை உருவாக்கும் வகையில் வடக்கில் இருந்தும்; தெற்கின் போதை தொடர்புகள் தொடர்பான செய்திகள் அதிகரிக்கும் நிலையில் இந்தவிடயங்களை தழுவி வருகின்றது செய்திவீச்சு…..
https://www.youtube.com/embed/_FMHJHHJjK4
