Home இலங்கை சமூகம் யாழில் குளத்தில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு

யாழில் குளத்தில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு

0

யாழ்.வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று தெற்கு பகுதியில் உள்ள குளத்திலிருந்து உடலில் கயிறு கட்டிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது இன்று (2) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த
முதியவர் வேதனை தாங்க முடியாமலே தனது உயிரை இவ்வாறு மாய்த்துக் கொண்டதாக
தெரியவருகின்றது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version