மொனராகலை ( Monaragala) மாவட்டம் கொவிதுபுர – ஜெயந்தி ஏரியில் கடற்றொழிலுக்குச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் (Police) தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (20) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் நேற்று முன்தினம் (19) வீட்டில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொவிதுபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://tamilwin.com/article/death-fisherman-1713674078
